பக்தி

பணிவு

பாசம்

எங்களை பற்றி

MD

எம்.சுமதி

நிர்வாக இயக்குநர்

என் பெயர் M.சுமதி ஆகிய நான் காவல்துறை அதிகாரியின் கடைசி மகள் மின்வாரியத்தின் அதிகாரியாக பணியாற்றியவரின் மூன்றாவது மகனான P.முருகனுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்பு என் கணவருக்கு மது பழக்கம் இருப்பது எனக்கு தெரிய வந்தது. இவரது மதுபழக்கத்தினால் நானும் எனது ஒரே மகனும் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டோம். பின்பு என் கணவர் மதுவை விட்டு பதினெட்டு வருடங்கள் ஆனது. குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது. பின்பு குடும்பத்தில் நடந்த ஒரு துயரமான சம்பவம் என் கணவரின் மனதை அதிக அளவில் பாதித்தது. இதன் காரணமாக பதினெட்டு வருடங்கள் கழித்து என் கணவர் மீண்டும் மது அருந்த ஆரம்பித்து முடிவில் தன்னிலை மறந்து பைத்தியமாக மாறி எப்போது மரணம் அடைவார் என்று அனைவரும் நினைத்தார்கள். பின்பு, என் கணவரின் உடன் பிறந்த ஒரே சகோதரி S.பத்மா, சகோதரியின் கணவர் திரு.ஆர்.சங்கர்பாபு அவர்களிடம் இவரது மது பழக்கத்தை பற்றி முழுவிவரத்தையும் தெரிவித்தேன். இவர்கள் இருவரின் கருணையால் AA அமைப்பு என்ற அமைப்பில் சேர்ந்தேன். (ஆல்கஹாலிக்ஸ்; அனானிமஸ்) இந்த அமைப்பை தொடர்பு கொண்டு எனது கணவரை மரணப்பிடியில் இருந்து நானும் என் கணவரின் உடன் பிறந்த சகோதரியும், சகோதரியின் கணவரும் சேர்ந்து என் கணவரின் உயிரை இறைவன் மூலமாக காப்பாற்றினார்கள். இப்போது என் கணவர் மது அருந்துவது இல்லை.
இப்போது எங்கள் குடும்பம் இறைவன் மூலமாக மகிழ்ச்சியாக இருக்கின்றோம். நானும் எனது கணவரும் ஒரு நாள் இரவு பேசிக்கொண்டிருக்கும் பொழுது நம்மை போன்று மதுவிற்கு அடிமையாகி அதிக பாதிப்பிற்க்கு உள்ளாகி உள்வர்களை இறைவன் வழியில் மதுவில் இருந்து மீட்டு நல்வாழ்க்கை வாழ என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எனது கணவர் மதுபோதை மறுவாழ்வு மையத்தை நடத்தலாம் என்று கூறினார். இதன் பயனாக பலரிடம் கடன் வாங்கி தற்போதுஎம்.கே. பவுண்டேஷன் (மது போதை மறுவாழ்வு மையம்) என்ற சமூக சேவை மையத்தை 2014-ல்விருதுநகரில் தொடங்கினோம்.
இந்த மையத்தில் Dr.R.நிஷாந்த் - M.B.B.S, D.P.M மனநல சிறப்பு மருத்துவர் மற்றும் Dr.R.நிரஞ்சனாதேவி - M.B.B.S பொது மருத்துவர் (பகுதி நேர சேவை), செவிலியர் மூன்று நபர்கள், சமூகபணி ஆர்வலர்கள் மூன்று நபர்கள், சமையல் செய்பவர்கள் இரண்டு நபர்கள் மற்றும் தியான வகுப்பு ஆசிரியர் இருவர், சமூக ஆர்வலர்கள், 2 பாதுகாவலர்கள் மற்றும் 1 ஓட்டுநர் என்று பலரின் ஒத்துழைப்புடன் இறைவன் காட்டிய வழியில் நடத்தி வருகின்றேன். எம்.கே.பவுண்டேஷன் மது மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் நோக்கம் குடிபோதை நோயினால் எங்கள் குடும்பம் பட்ட கஷ்டம் வேறு எந்த ஒரு குடிபோதை நோயாளியின் குடும்பத்திற்கும் வரவேண்டாம் என இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். இதுவே எங்களது இலக்கு ஆகும்.
இங்கு இருக்கும் குடி/போதை நோயாளிகள் மற்றும் வரப்போகும் குடி/போதை நோயாளிகள் எந்த சூழ்நிலையிலும், மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தப்படமாட்டார்கள்.
இங்கு நடப்பது தொழிலோ, வியாபாரமோ அல்ல. இது மது/போதை நோயாளிகளின் உயிரையும், குடும்பத்தையும் வாழ வைக்க இறைவன் மூலமாக எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறோம். என்றும் மக்கள் சேவையில் மதுபோதை நோயாளிகளின் நல்வாழ்வுக்காக இயங்கும் எம்.கே.பவுண்டேஷன் மது/போதை மறுவாழ்வு மையம் 4/481C, கணபதி நகர், புளியங்குளம், தாதம்பட்டி ரோடு, விருதுநகர்-626003.
என் கணவரின் உடன் பிறந்த ஒரே சகோதரி S.பத்மா, சகோதரியின் கணவர் திரு.ஆர்.சங்கர்பாபு, அவர்களுக்கும் இறை வழியில் எங்களது மூச்சும் பேச்சும் இருக்கும்வரை நன்றியை, தெரிவித்து கொள்கிறோம்.
"மது / போதை நோயாளிகள் அனைவரும் நல்வழியில் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்."

அனைத்தும் இறைவன் செயல்

நன்றி!

நிர்வாகம்

எங்கள் முகவரி

4/481C, கணபதி நகர், புளியங்குளம், தாதம்பட்டி ரோடு,

சூலக்கரைமேடு,

விருதுநகர் - 626 003.

தமிழ்நாடு

LC No - 225 | Reg No - 71/2014

எங்கள் மின்னஞ்சல்

எம்.கே. பவுண்டேஷன் © 2025

உருவாக்கி பராமரிப்பது

PD